முற்றுகிறது மோதல்-சுழற்சி முறை குறித்த டோணியின் பேச்சுக்கு ஷேவாக் அதிருப்தி, எதிர்ப்பு

February 22, 2012   ·   0 Comments

இந்திய அணியில் இளம்வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதாக கூறிவிட்டு, தற்போது மூத்த வீரர்கள் பீல்டிங்கில் மந்தமாக செயல்படுவதாக கேப்டன் டோணி கூறுவது சரியில்லை என்று இந்திய துவக்க ஆட்டக்காரர் ஷேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே டோணிக்கும், ஷேவாக்குக்கும் இடையே பணிப்போர் நடந்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் டோணியின் சுழற்சி முறைக்கு ஷேவாக் அதிருப்தி தெரிவித்துள்ளது விரிசலை மேலும் அதிகரித்து வரும் போட்டிகளில் இந்தியாவுக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் வாய்ப்பைப் பிரகாசப்படுத்தியுள்ளது.

இந்திய அணியில் உள்ள இளம்வீரர்களுக்கு வாய்ப்பு தரும் வகையில், மூத்த வீரர்களுக்கு சுழற்சி முறையில் விளையாடும் முறையை கேப்டன் டோணி அறிமுகப்படுத்தினார். இதன்படி அணியில் உள்ள கம்பிர், ஷேவாக், சச்சின் ஆகியோருக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இது மூத்த வீரர்களின் அதிருப்தியையும், கண்டனத்தையும் சம்பாதித்தது. காரணம், சுழற்சி என்ற பேரில் சச்சினையும் உட்கார வைத்து விட்டாரே டோணி என்பதுதான் காரணம். இத்தனைக்கும் சச்சின் இந்தத் தொடரில் இதுவரை பெரிய அளவில் விளையாடவில்லை என்பது வேறு விஷயம்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு பிறகு பத்தரிக்கையாளர்கள் சந்திப்பின் போது பேசிய டோணி, மூத்த வீரர்கள் பீல்டிங்கில் மந்தமாக செயல்படுவதால், சுழற்சி முறை அறிமுகப்படுத்தியதாக தெரிவித்தார்.

இதனால் மூத்த வீரர்களான சச்சின், ஷேவாக், கம்பிர் ஆகியோர் அதிருப்தி அடைந்துள்ளனர். நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில், டோணி கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது. இதனால் கேப்டனாக பொறுப்பு வகித்த ஷேவாக், டோணியின் சுழற்சி முறையை பின்பற்றாமல், 3 மூத்த வீரர்களும் போட்டியில் கலந்து கொள்ள அனுமதித்தார். (இந்த மூன்று பேருமே 55 ரன் சேர்ப்பதற்குள் அவுட்டாகிப் போய் விட்டனர். இவர்களில் அதிகபட்சமாக சச்சின் மட்டும் 29 ரன்கள் சேர்த்தார். ஷேவாக் முட்டை போட்டார், கம்பிர் 22 ரன்கள் எடுத்தார்.)

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஷேவாக், டோணியை கடுமையாக விமர்சித்தார்.

அவர் கூறுகையில், 

ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள அடுத்த உலக கோப்பை தொடருக்கு இளம் வீரர்களை தயார் செய்யும் வகையில், இந்திய அணியில் உள்ள மூத்த வீரர்களுக்கு சுழற்சி முறை அறிமுகப்படுத்தப்படுவதாக டோணி எங்களிடம் அறிவித்து இருந்தார்.

ஆனால் மூத்த வீரர்கள் பீல்டிங்கில் மந்தமாக செயல்படுவதாக அவர் எங்களிடம் கூறியதே இல்லை. டோணி மீடியாவில் அப்படி கூறியது ஏன் என்று தெரியவில்லை. அவர் மீடியாவில் கூறியதன் கருத்தும் எனக்கு புரியவில்லை.

நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில் நான் எப்படி கேட்ச் பிடித்தேன் என்பதை பார்த்தீர்களா? இதேபோல தான் கடந்த 10 பத்து ஆண்டுகளாக பீல்டிங் செய்து வருகின்றேன். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மூத்த வீரர்களின் பீல்டிங்கில் 20 ரன்கள் தவறியதாக டோணி கூறுவது ஏன் என்று தெரியவில்லை.

டோணி அணியின் கேப்டன், தலைவர். எனவே இது குறித்து நான் அவரிடம் கேட்க போவதில்லை. அணியில் உள்ள மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று கேப்டனும், பயிற்சியாளரும் நினைத்தால், அதனை ஏற்க நான் தயாராக உள்ளேன். இதனால் எந்த தடையும் இல்லை.

நான் எல்லா போட்டிகளிலும் கலந்து கொள்ள தயாராக இருக்கின்றேன். ஆனால் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் தேர்வு செய்யும் 11 அடங்கிய அணிக்கும் மதிப்பு அளிக்கின்றேன்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்காக எங்களுக்கு சற்று ஓய்வு தருவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். நாங்கள் ஒரு குழுவாக செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகின்றோம். கேப்டன் டோணியின் விருப்பதற்கு ஏற்ப அவர் பேசலாம். கடந்த 2 ஆண்டுகளாக டோணி தான் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசி வருகின்றார். அதில் நாங்கள் திருப்தியாக உள்ளோம்.

நேற்று இலங்கைக்கு எதிரான போட்டியில் நான் உட்பட பேட்ஸ்மேன்கள் யாரும் பொறுப்புடன் விளையாடவில்லை. எனது பேட்டிங்கில் இன்னும் பொறுமையை கடைபிடிக்க வேண்டியுள்ளது. அதிரடியாக விளையாட முயன்று, சில எளிய முறைகளில் அவுட்டாகி விடுகின்றேன். அதற்காக அதிக பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளேன் என்றார்.

Related posts:

வான்கடே மைதானத்தில் ரகளையில் ஈடுபட்ட ஷாருக்கான் வாழ்நாள் முழுவதும் மைதானத்தில் நுழைய தடை!
சென்னை சூப்பர் சொதப்பல் ஆட்டம்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
ஐ.பி.எல்.5: இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவதி டெல்லியா? கொல்கத்தா? இன்று பலப்பரீட்சை

By

Tags: , , , , ,

விளையாட்டு" இந்திய அணியில் இளம்வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதாக கூறிவிட்டு, தற்போது மூத்த வீரர்கள் பீல்டிங்கில் மந்தமாக செயல்படுவதாக கேப்டன் டோணி கூறுவது சரியில்லை என்று இந்திய துவக்க ஆட்டக்காரர் ஷேவாக் கருத்து தெரிவித்துள்ளார். ஏற்கனவே டோணிக்கும், ஷேவாக்குக்கும் இடையே பணிப்போர் நடந்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் டோணியின் சுழற்சி முறைக்கு ஷேவாக் அதிருப்தி தெரிவித்துள்ளது விரிசலை மேலும் அதிகரித்து வரும் போட்டிகளில் இந்தியாவுக்குப் பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் வாய்ப்பைப் பிரகாசப்படுத்தியுள்ளது. இந்திய அணியில் உள்ள இளம்வீரர்களுக்கு வாய்ப்பு தரும் வகையில், [...]

Readers Comments (0)





Please note: Comment moderation is enabled and may delay your comment. There is no need to resubmit your comment.

Comment moderation is enabled. Your comment may take some time to appear.


குருபெயர்ச்சி பலன்கள்

Guruperchi

பேஸ் புக்கில் ஒற்றன்.com விரும்பிகள்

Google+ இல் ஒற்றன்.com விரும்பிகள்

Ads

Ads

Tamil Cine Actress Gallery

Ads

மின் அஞ்சலில் செய்திகளை பெற

சினிமா டிரைலர்கள்

Get the Flash Player to see the wordTube Media Player.

Related News

இதுவரை வந்தவர்கள்

மேலும் பிற செய்திகள்

21-richa-tapasee-300

எதுக்கு இந்தப் பொழப்பு? – டாப்ஸி மீது பாயும் ரிச்சா

Ottran.com

சினிமாவுக்கு வெளியே நடிகைகள் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வது நாம் அடிக்கடி பார்க்கும் ‘சீன்’தான்… அந்த வகையில் இந்த சம்மர் சீஸன் சீன்… டாப்ஸி – ரிச்சா மோதல்! ஆடுகளம், வந்தான் வென்றான் என இரு படங்களில் டாப்ஸி நடித்துள்ளார். ரிச்சாவும் மயக்கம் என்ன, ஒஸ்தி படங்களில் நடித்துள்ளார். ஆனால் ரசிகர்களைப் பொறுத்தவரை, டாப்ஸியை விட, ரிச்சாவுக்குதான் அதிக ஓட்டு. அவர் கவர்ச்சியில் ‘ரிச்’ எக்கச்சக்கம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ரசிகர்கள் மட்டுமல்ல, இயக்குநர்கள் – தயாரிப்பாளர்களுக்கும் ...

21-amala-paul53-300

இந்தியிலும் ‘சொதப்புவாரா’ அமலா பால்?

Ottran.com

தமிழில் எப்படியோ ஹிட்டாகி விட்ட காதலில் சொதப்புவது எப்படி படம் இப்போது இந்திக்கும் போகிறதாம். இதிலும் தானே நாயகியாகி விட அமலா பால், இயக்குநரிடம் துண்டைப் போட்டு வைத்துள்ளாராம். அமலா பால், சித்தார்த் ஜோடியாக நடிக்க பாலாஜி இயக்கத்தில் உருவான படம் காதலில் சொதப்புவது எப்படி. இப்படம் எப்படியோ தமிழில் ஹிட்டாகி விட்டது. சத்தம் போடாமல் ஓடினாலும் கூட சத்தான முறையில் ஓடியதால் இப்போது இப்படத்தை இந்திக்கும் கொண்டு போகிறார்களாம். இதே பாலாஜிதான் இந்தியிலும் இயக்கப் ...

21-kalakalappu11-300

கலகலப்பு இரண்டாம் பாகத்துக்கு தயாராகும் சுந்தர் சி & கோ!

Ottran.com

கரண்ட் இல்லாத கொடுமை, பாக்கெட்டைக் கிழிக்கும் விலைவாசி, எப்போதுமில்லாத உக்கிர வெயில், ஒன்றுமே செய்யாவிட்டாலும் கோடிக்கணக்கில் விளம்பரம் செய்து தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அரசியல்வாதிகள்… இந்த இம்சைகளையெல்லாம் மறந்துவிட்டு, மூன்று மணி நேரத்தைச் செலவிட வேண்டும் என்றால்… அது சினிமாதான். அந்த சினிமாவும் அழுது வடியாமல்… கலகலவென கடைசி வரை சிரிப்பும் கும்மாளுமாக இருந்தால் எவ்வளவு நல்லாருக்கும் என மக்கள் விரும்புவதை அப்படியே பிரதிபலிப்பது போல படங்களும் அமைந்துவிட்டால்… அப்படி அமைந்ததால்தான் ஒரு கல் ஒரு ...

21-dhanush-ais-300

‘தனுஷ் – ஸ்ருதி நெருக்கத்தைப் பார்த்து ஐஸ்வர்யா டென்ஷனானது உண்மைதான்!’

Ottran.com

தனுஷ் – ஸ்ருதி விவகாரம் இன்னும் ஓய்ந்த மாதிரி தெரியவில்லை. இருவருக்கும் இடையிலான நெருக்கமான தொடர்புகள், தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவுக்கு கடும் கோபத்தை உண்டாக்கியிருப்பதாகவும், இதனால் தனுஷ் தனியாக ஒரு வீட்டில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் மனைவி ஐஸ்வர்யா மற்றும் குழந்தைகளுடன் தனுஷ் தென் ஆப்ரிக்காவுக்குப் போயிருப்பதாக அவர் தரப்பிலிருந்து செய்தி வெளியாகியுள்ளது. தனுஷ் – ஐஸ்வர்யா – ஸ்ருதி விவகாரம் குறித்து, தனுஷின் தந்தை கஸ்தூரிராஜா கூறுகையில், ” தனுஷ் – ஐஸ்வர்யா இடையே ...

22-karuna6-300

ஜனாதிபதி தேர்தல்: காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளருக்கே ஆதரவு- கருணாநிதி

Ottran.com

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முன்னிறுத்தும் வேட்பாளரையே தி.மு.க. ஆதரிக்கும் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் கருணாநிதி கூறியதாவது: கேள்வி: மத்திய அரசு இன்றோடு மூன்றாண்டுகளை முடித்துள்ளது. ஆனால் மத்திய அரசின் சார்பில் தமிழகத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை என்று சொல்லப்படுகிறதே, அதைப்பற்றி என்ன கூறுகிறீர்கள்? பதில்: மத்திய அரசின் சார்பில் தமிழகத்திலே நிறைவேற்றப்படும் 15 நிலைத்த நலத் திட்டங்களுக்காக 2005-க்கும் 2010-க்கும் இடைப்பட்ட ஐந்தாண்டுகளில் ரூ.36,688 கோடி நிதி ...

Ads

இந்த வார காமெடி பீஸ்

எங்களின் பிற பதிப்புகள்

Manakkum Samayal
Indian Actress Wallpaper
Tamil Best Comedy
Tamil Best Songs
Kirukalgal
Content Protected Using Blog Protector By: PcDrome.