மோசமான கருத்துக்களை சென்சார் செய்ய நாங்க ரெடி! – ட்விட்டர் அதிரடி

January 28, 2012   ·   0 Comments

இந்தியாவில் எந்தவகை மோசமான, ஆபாசமான தகவல்களையும் சென்சார் செய்யமாட்டோம் என்று கூகுளும் பேஸ்புக்கும் அடம்பிடித்து வரும் நிலையில், இணைய தள உலகில் முக்கிய நிறுவனமாகத் திகழும் ட்விட்டர், சட்டம் வலியுறுத்தினால் மோசமான கருத்துக்கள், செய்திகளை நீக்கத் தயார் என அறிவித்துள்ளது.

இணையதளங்களை இந்தியாவில் சென்சார் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு இதன் மூலம் புதிய பலம் கிடைத்துள்ளது.

இணையதளங்களை சென்சார் செய்வது குறித்து இந்தியாவில் இப்போதுதான் புதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

இணையவெளியில் கோடிக்கணக்கான ஆபாச, வன்முறையைத் தூண்டும், மத உணர்வுகளைப் புண்படுத்தும் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த தகவல்களைத் தாங்கி வரும் தளங்களுக்கு கூகுள், யாஹூ, மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்கள் இடமளிக்கின்றன. இந்த நிறுவனங்களின் தேடியந்திரங்கள் (search engines) எல்லா வகையான தகவல்களையும் கொண்டு வந்து கொட்டுகின்றன. இவற்றை பல நாடுகள் தடை செய்வதில்லை. ஆனால் சில முக்கிய நாடுகளில் தடை அமலில் உள்ளது.

பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் ஆபாச இணையதளங்கள், மத ரீதியான வக்கிரமான கருத்துக்களைப் பரப்பும் தளங்களை தடை செய்துள்ளனர். இங்கெல்லாம் கூகுளைத் தட்டினால் இந்த வகைத் தளங்களைப் பார்க்க முடியாது.

சீனாவில் 90 சதவீத சென்சார் அமலில் உள்ளது. இதனை கோல்டன் ஷீல்டு புராஜக்ட் எனும் சட்டத்துக்கு உட்பட்டு சென்சார் விதிகளை கடைப்பிடித்து செயல்படுகிறது கூகுள். ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த கூகுள், இதற்கு கட்டுப்படாவிட்டால் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளிவிடுவோம் என சீன அரசு எச்சரித்ததால் அடங்கிப் போனது.

அதேபோல, ஜெர்மனி மற்றும் பிரான்சில் நாஜி கருத்துகளைப் பரப்பும் இணைய தளஙக்களை சென்சார் செய்ய கூகுள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களுமே ஒப்புக் கொண்டு நடைமுறைப்படுத்தி வருகின்றன. அந்த நாடுகளின் சட்டங்கள் இதை வலியுறுத்துவதால் அதை கடுமையாக பின்பற்றுகின்றன கூகுள் போன்றவை.

ஆனால் இந்தியாவில் இணைய வெளியைக் கட்டுப்படுத்த குறிப்பிட்ட சட்டங்கள் எதுவும் இல்லை என்பதைக் காரணம் காட்டி, அனைத்து வகை வக்கிர, அநாகரீகக் கருத்துக்கள், படங்கள் மற்றும் வீடியோக்களை கொண்டு வந்து கொட்டுகின்றனர்.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் உலகின் வக்கிர குப்பைகளைக் கொட்டும் நாடாக இந்தியா மாறிவிட்டது என்றும், இதுவே சமூகக் குற்றங்கள், வரம்பு மீறல்கள் மற்றும் மோசமான கலாச்சாரத்துக்கு வழி வகுத்துவிட்டதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரி்வித்து வருகின்றனர்.

இந்த நிலை அரசுக்கு கவலை அளித்துள்ளது. எனவே, இந்த தளங்கள் அனைத்தையும் சென்சார் செய்ய வேண்டும், மோசமான content-ஐ தடை செய்ய வேண்டும் என வழக்கும் தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றங்களும் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களை, ஏன் இந்த குப்பைகளை இந்தியாவில் தடுக்க முயற்சிக்கவில்லை என கேள்வி எழுப்பி வருகின்றன.

இணையவெளியை கட்டுப்படுத்துவது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்றும், இந்தியா ஜனநாயக நாடு என்பதால் இங்கே அதை செய்ய மாட்டோம் என்றும், அது இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் என்றும் சமீபத்தில் கூகுள் நிறுவனம் பம்மாத்து பண்ணியது.

ஆனால் கூகுளுக்கு நேர் எதிரான நிலைப்பாட்டை ட்விட்டர் தெரிவித்துள்ளது.

இந்திய அரசு சட்டப்படி வலியுறுத்தினால், தேசவிரோத, கலாச்சார விரோத கருத்துக்கள்- படங்களை நீக்கிவிடுகிறோம் என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது.

ட்விட்டர் சீனாவில் நுழைய திட்டம் போடுகிறது. அதனால்தான் உடனடியாக இப்படி இறங்கி வந்துள்ளது. கூகுளும் யாஹூவும் ஏற்கெனவே சீனாவில் உள்ளன, என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கூகுளும் யாஹூவும் சீனாவில் ஏற்கெனவே காலூன்றிவிட்டது உண்மைதான். ஆனால் எப்படி? சீனாவின் அனைத்து கட்டுப்பாடுகளையும் ஏற்று, அனைத்து மோசமான கருத்துக்களையும் நீக்கிய பிறகே வெளியிடுகின்றன என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

300 மில்லியன் பயனர்களைக் கொண்ட ட்விட்டரின் இந்த அறிவிப்பால், ஆட்சியாளர்கள் இணைய வெளியை கட்டுப்படுத்தும் வகையிலான விசேஷ சட்டத்தை இயற்றுவது அவசியமாகியுள்ளது. இப்படி ஒரு சட்டம் வந்தால், கூகுள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் தாமாகவே இணையதளங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் தொழில்நுட்பத்தை மாற்றிக் கொள்வார்கள்.

Related posts:

வாகனங்களுக்கான ஹை செக்யூரிட்டி நம்பர் பிளேட்- ஸ்பெஷல் ரிப்போர்ட்
இனி சென்னைக்கு 3, பிற பகுதிகளுக்கு 6 மணி நேரம் மின்வெட்டு?
கிங் பிஷர் விமான சேவையில் தொடரும் ரத்து- விமானிகள் விலகல்

By

Tags: , , , ,


Readers Comments (0)





Please note: Comment moderation is enabled and may delay your comment. There is no need to resubmit your comment.

Comment moderation is enabled. Your comment may take some time to appear.


பேஸ் புக்கில் ஒற்றன்.com விரும்பிகள்

Google+ இல் ஒற்றன்.com விரும்பிகள்

Ads

Ads

Tamil Cine Actress Gallery

மின் அஞ்சலில் செய்திகளை பெற

சினிமா டிரைலர்கள்

Get the Flash Player to see the wordTube Media Player.

Related News

இதுவரை வந்தவர்கள்

மேலும் பிற செய்திகள்

highcourt1(14)

விஜயகாந்த் சஸ்பெண்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

Ottran.com

தமிழக சட்டப்பேரவையில் இருந்து தாம் 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக  தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில், சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரன், இதுகுறித்து மார்ச் 2-ம் தேதிக்குள் சபாநாயகர், பேரவைச் செயலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 2-க்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார். முன்னதாக, தேமுதிக ...

Power star (1)

”முந்திரிக்கா கத்திரிக்கா” பவர் ஸ்டாரின் பஞ்ச் டையலாக்!

Ottran.com

சமூக இணையதளங்களில் முக்கிய பொதுப் பிரச்சினைகளுக்கு அடுத்து மக்களால் அதிகமாக விவாதிக்கப்படுபவர் “பவர் ஸ்டார்” சீனிவாசன். பவர்ஸ்டாரை சார்ந்து வரும் அனைத்து செய்திகளிலும் பவர் ஸ்டாரின் ரசிகர்கள் தங்களது நேர விரயம் பாராமல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தற்போது பவர் ஸ்டாரின் ஒரு வீடியோ காட்சி முக்கிய வலைதளங்களில் உலா வருகிறது. அந்த வீடியோ காட்சியில் ஒஸ்தி படத்தில் வரும் “கலாசலா” பாடலுக்கு பவர் ஸ்டார் டான்ஸ் ஆடுகிறார். அவரை சுற்றியிருந்த ரசிகர்களோ விசிலடித்து பெரும் ஆரவாரம் செய்கின்றனர்.  திடீரென்று கூட்டத்திலிருந்த ...

22-trisha-kamal-300

கமலுடன் நடிச்சா எனக்கு வயசாயிடுச்சின்னு அர்த்தமா? – சீறும் த்ரிஷா

Ottran.com

கமல்ஹாஸனின் மன்மத அம்பு படத்தில் நடித்ததால் தன்னை வயதான நடிகை என்று நினைப்பது தவறு என்கிறார் த்ரிஷா. வயது முதிர்ந்த நடிகர்களுடன் நடித்துவிட்டதால் திரிஷாவுடன் ஜோடி சேர இளம் நடிகர்கள் மறுபப்தாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து த்ரிஷாவிடம் கேட்டபோது, பொரிந்து தள்ளிவிட்டார். அவர் கூறுகையில், “நடிகர், நடிகைளுக்கு வயது என்பது பிரச்சினையே இல்லை. நான் வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லா ஹீரோக்களுடனும் நடிக்கிறேன். நடிகைகள் கவனிக்க வேண்டியது கதையும், கேரக்டரும்தான். இரண்டும் சிறப்பாக அமைந்தால் யாருடன் வேண்டுமானாலும் ...

22-ananya4-300

ஆஞ்சநேயன்தான் எனக்கு வேணும்! – அனன்யா

Ottran.com

முதல் மனைவி இருப்பது குறித்தோ, அந்த விவகாரம் கோர்ட்டுக்குப் போவது குறித்தோ எனக்குக் கவலையில்லை. ஆஞ்சநேயன்தான் எனக்கு கணவனாக வேண்டும், என பிடிவாதமாகக் கூறியுள்ளார் அனன்யா. சைஸ், வெயிட் இரண்டிலும் கிட்டத்தட்ட ‘சித்தப்பு’ ரேஞ்சுக்கு ஒரு பார்ட்டியை காதலித்தார் அனன்யா. அவர்தான் ஆஞ்சநேயன். தொழிலதிபராம்! அனன்யா பங்கேற்கும் விழாக்களிலும் படப்பிடிப்புகளிலும் ஆஞ்சநேயன் தினமும் ஆஜராகி பரிசுகள், காதல் கடிதங்கள் கொடுத்து வலை விரிக்க, அதில் சுலபமாக விழுந்தார் அனன்யா. இதையடுத்து நிச்சயதார்த்தம் நடத்தி திருமண தேதியை முடிவு ...

22-vijayakanth-30

நேற்று ஒன்று, இன்று 29, நாளை நமது ஆட்சி-விஜயகாந்த் முழக்கம்

Ottran.com

எனது கட்சித் தொண்டர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க முடியாது. அவர்கள் ஒவ்வொருவரும் போர் வீரர்களைப் போன்றவர்கள். ஒழுக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் பெயர்போனவர்கள். 2016-ல் எங்கள் ஆட்சி அமைவது உறுதி. நேற்று ஒரு எம்.எல்.ஏ., இன்று 29 எம்.எல்.ஏ.க்கள், நாளை ஆட்சி நமதே என்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். சென்னையில் நேற்று நடந்த தேமுதிக பொதுக்குழுக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது: கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் கூட்டணி அமைத்து மக்களை ஏமாற்றி வருகின்றன. ...

Ads

இந்த வார காமெடி பீஸ்

எங்களின் பிற பதிப்புகள்

Manakkum Samayal
Indian Actress Wallpaper
Tamil Best Comedy
Tamil Best Songs
Kirukalgal
Content Protected Using Blog Protector By: PcDrome.