January 28, 2012 · 0 Comments
இத்தாலி சொகுசுக் கப்பல் விபத்தில் சிக்கி மன உளைச்சலுக்கு ஆளான பயணிகளுக்கு தலா 7 லட்சத்து 15ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த 13ம் தேதியன்று இத்தாலியின் ரோம் நகரத்திற்கு அருகில் உள்ள கிக்லியோ தீவு பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற கோஸ்டா கான்கார்டியா என்ற கப்பல் பாறையில் மோதி கடலில் கவிழ்ந்தது. இதில் 16 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இன்னமும் 16 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
11 ஆயிரம் யூரோ
இந்த நிலையில் விபத்தில் சிக்கியதால் மன உளைச்சலுக்கு ஆளான பயணிகள் 3000 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு நிவாரணம் தர கப்பல் நிர்வாகம் முன்வந்துள்ளது. ஒவ்வொரு பயணிகளுக்கும் தலா 11 ஆயிரம் யூரோ அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 7 லட்சத்து 15 ஆயிரம் வழங்க நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 81 லட்சம் வழங்கவேண்டும் என்று கோடாகான்ஸ் என்ற மனித உரிமை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இத்தாலி கப்பல் விபத்தில் மும்பையைச் சேர்ந்த ஒருவர் காணமல் போய் உள்ளார். 200க்கும் அதிகமான இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
By Ottran.com
Tags: விபத்து, கப்பல், ship accident