4 வயது சிறுமியை 2 ஆசிரியைகள் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றம்

January 24, 2012   ·   0 Comments

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த 4 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள்தான் 4 வயது ஷாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஷாலினி அப்பகுதியில் உள்ள புகழ் பெற்ற ஏகேடி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி படித்து வந்தாள்.

இந்த நிலையில்தான் பள்ளியின் தலைமை ஆசிரியை லசி போஸ்கோ மற்றும் எல்கேஜி ஆசிரியை போர்ஷியா ஆகியோர் சிறுமியிடம் தகாதமுறையில் நடந்து கொண்டனர். இந்த அக்கிரமத்தைச் செய்த இருவரும், சிறுமியை மிரட்டியும் வைத்திருந்தனர். நடந்ததை யாரிடமாவது கூறினால் பாம்பு அடைக்கப்பட்ட இருட்டு அறையில் வைத்து உன்னைப் பூட்டி விடுவோம் என இவர்கள் மிரட்டியுள்ளனராம்.

ஆனால் ஆசிரியைகளின் அத்துமீறல் அதிகரித்துக் கொண்டே போன நிலையில் தனது மழலை மாறாத குரலில் பெற்றோரிடம் அதைக் கூறியபோது சுரேஷ் தம்பதியினர் அதிர்ச்சியில் நிலை குலைந்து போய் விட்டனர். இதையடுத்து அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காததால் கடலூரைச் சேர்ந்த மனித உரிமை பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியை மீது வழ்ககுப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிடப்பட்டது. வழக்கு விசாரணை திருப்திகரமாக இல்லை என்றால் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என்றும் அது எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் வழ்ககில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று பெற்றோர் மற்றும் மனுதாரர் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழ்ககு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து இன்னும் 60 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts:

தமிழக மின்வெட்டு 5 மணி நேரமாக குறைகிறது-சென்னைக்கு 2 மணி நேரமாக உயர்கிறது!
திருப்பூர் ஆலுக்காஸ் நகைக்கடையை சூறையாடிய கொள்ளையர்கள்-45 கிலோ நகைகள் பறிபோயின!
சங்கரன்கோவில் செல்லத் தயாராகிறார் ஜெயலலிதா... கிராமம் கிராமமாக போக திட்டம்

By

Tags: ,


Readers Comments (0)





Please note: Comment moderation is enabled and may delay your comment. There is no need to resubmit your comment.

Comment moderation is enabled. Your comment may take some time to appear.


பேஸ் புக்கில் ஒற்றன்.com விரும்பிகள்

Google+ இல் ஒற்றன்.com விரும்பிகள்

Ads

Ads

Tamil Cine Actress Gallery

மின் அஞ்சலில் செய்திகளை பெற

சினிமா டிரைலர்கள்

Get the Flash Player to see the wordTube Media Player.

Related News

இதுவரை வந்தவர்கள்

மேலும் பிற செய்திகள்

highcourt1(14)

விஜயகாந்த் சஸ்பெண்ட் வழக்கு: சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

Ottran.com

தமிழக சட்டப்பேரவையில் இருந்து தாம் 10 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிராக  தேமுதிக தலைவர் விஜயகாந்த் தொடர்ந்த வழக்கில், சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரன், இதுகுறித்து மார்ச் 2-ம் தேதிக்குள் சபாநாயகர், பேரவைச் செயலர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 2-க்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தார். முன்னதாக, தேமுதிக ...

Power star (1)

”முந்திரிக்கா கத்திரிக்கா” பவர் ஸ்டாரின் பஞ்ச் டையலாக்!

Ottran.com

சமூக இணையதளங்களில் முக்கிய பொதுப் பிரச்சினைகளுக்கு அடுத்து மக்களால் அதிகமாக விவாதிக்கப்படுபவர் “பவர் ஸ்டார்” சீனிவாசன். பவர்ஸ்டாரை சார்ந்து வரும் அனைத்து செய்திகளிலும் பவர் ஸ்டாரின் ரசிகர்கள் தங்களது நேர விரயம் பாராமல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தற்போது பவர் ஸ்டாரின் ஒரு வீடியோ காட்சி முக்கிய வலைதளங்களில் உலா வருகிறது. அந்த வீடியோ காட்சியில் ஒஸ்தி படத்தில் வரும் “கலாசலா” பாடலுக்கு பவர் ஸ்டார் டான்ஸ் ஆடுகிறார். அவரை சுற்றியிருந்த ரசிகர்களோ விசிலடித்து பெரும் ஆரவாரம் செய்கின்றனர்.  திடீரென்று கூட்டத்திலிருந்த ...

22-trisha-kamal-300

கமலுடன் நடிச்சா எனக்கு வயசாயிடுச்சின்னு அர்த்தமா? – சீறும் த்ரிஷா

Ottran.com

கமல்ஹாஸனின் மன்மத அம்பு படத்தில் நடித்ததால் தன்னை வயதான நடிகை என்று நினைப்பது தவறு என்கிறார் த்ரிஷா. வயது முதிர்ந்த நடிகர்களுடன் நடித்துவிட்டதால் திரிஷாவுடன் ஜோடி சேர இளம் நடிகர்கள் மறுபப்தாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து த்ரிஷாவிடம் கேட்டபோது, பொரிந்து தள்ளிவிட்டார். அவர் கூறுகையில், “நடிகர், நடிகைளுக்கு வயது என்பது பிரச்சினையே இல்லை. நான் வயது வித்தியாசம் பார்க்காமல் எல்லா ஹீரோக்களுடனும் நடிக்கிறேன். நடிகைகள் கவனிக்க வேண்டியது கதையும், கேரக்டரும்தான். இரண்டும் சிறப்பாக அமைந்தால் யாருடன் வேண்டுமானாலும் ...

22-ananya4-300

ஆஞ்சநேயன்தான் எனக்கு வேணும்! – அனன்யா

Ottran.com

முதல் மனைவி இருப்பது குறித்தோ, அந்த விவகாரம் கோர்ட்டுக்குப் போவது குறித்தோ எனக்குக் கவலையில்லை. ஆஞ்சநேயன்தான் எனக்கு கணவனாக வேண்டும், என பிடிவாதமாகக் கூறியுள்ளார் அனன்யா. சைஸ், வெயிட் இரண்டிலும் கிட்டத்தட்ட ‘சித்தப்பு’ ரேஞ்சுக்கு ஒரு பார்ட்டியை காதலித்தார் அனன்யா. அவர்தான் ஆஞ்சநேயன். தொழிலதிபராம்! அனன்யா பங்கேற்கும் விழாக்களிலும் படப்பிடிப்புகளிலும் ஆஞ்சநேயன் தினமும் ஆஜராகி பரிசுகள், காதல் கடிதங்கள் கொடுத்து வலை விரிக்க, அதில் சுலபமாக விழுந்தார் அனன்யா. இதையடுத்து நிச்சயதார்த்தம் நடத்தி திருமண தேதியை முடிவு ...

22-vijayakanth-30

நேற்று ஒன்று, இன்று 29, நாளை நமது ஆட்சி-விஜயகாந்த் முழக்கம்

Ottran.com

எனது கட்சித் தொண்டர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க முடியாது. அவர்கள் ஒவ்வொருவரும் போர் வீரர்களைப் போன்றவர்கள். ஒழுக்கத்துக்கும் கட்டுப்பாட்டுக்கும் பெயர்போனவர்கள். 2016-ல் எங்கள் ஆட்சி அமைவது உறுதி. நேற்று ஒரு எம்.எல்.ஏ., இன்று 29 எம்.எல்.ஏ.க்கள், நாளை ஆட்சி நமதே என்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். சென்னையில் நேற்று நடந்த தேமுதிக பொதுக்குழுக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது: கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் கூட்டணி அமைத்து மக்களை ஏமாற்றி வருகின்றன. ...

Ads

இந்த வார காமெடி பீஸ்

எங்களின் பிற பதிப்புகள்

Manakkum Samayal
Indian Actress Wallpaper
Tamil Best Comedy
Tamil Best Songs
Kirukalgal
Content Protected Using Blog Protector By: PcDrome.